Telegram Web
⚪️🔴பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவை கூடுகிறது

காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்குவதாக தகவல்

- @u7news
⚪️🔴டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

ஆம் ஆத்மி எம்எல்ஏ மணீஷ் சிசோடியா பெயில் வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது

மதுபான கொள்கையை வகுப்பதில் ஊழல் செய்ததால் புகார் வைக்கப்பட்டு உள்ளது

இதே வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

- @u7news
⚪️🔴இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்.

ஆசிய விளையாட்டு போட்டிகள்: வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

- @u7news
⚪️🔴சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி

துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதம்

- @u7news
⚪️🔴BREAKING: சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை

சிக்கிம் லச்சன் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்

- @u7news
⚪️🔴 ராமர் பாலத்தின் அருகே தரிசனம் செய்வதற்காக சுவர் ஒன்றைக் கட்டக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய மற்றொரு மனுவையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

சுவர் கட்ட நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? இது அரசின் நிர்வாக ரீதியான முடிவு - நீதிபதிகள் கருத்து.

- @u7news
⚪️🔴பொதுகூட்டம் நடத்தி நீபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்'

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு அவதூறாக பேச்சு

ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நூதன நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

- @u7news
⚪️🔴அக்டோபர் 12-ஆம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு

கடந்த 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது

3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்திருந்த நிலையில், 12ஆம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது

- @u7news
⚪️🔴தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை.

குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்- கடலூர் நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

- @u7news
⚪️🔴மயிலாடுதுறை: தில்லையாடி கிராமத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

- @u7news
⚪️🔴தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிப்பு.

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்.

தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

- @u7news
⚪️🔴டெல்லி ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை கைது செய்தது அமலாக்கத்துறை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சோதனையை தொடர்ந்து கைது

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது

- @u7news
⚪️🔴அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,400 ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

- @u7news
⚪️🔴இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்..

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று வாட்ஸ் அப்பிலும் 'Username' வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்:

மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அப்டேட்:

அதன்படி, வாட்ஸ் அப்பில், 'Username' ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருப்பதுபோன்று 'Username' ஆப்ஷனை மெட்டா கொண்டு வர உள்ளது.

ஏற்கனவே, வாட்ஸ் அப்பில் நம்பர் ஆப்ஷன் மட்டும் உள்ளது. இந்நிலையில், வரக்கூடிய 'Username' ஆப்ஷன் பயனர்களின் செல்போன் எண் மற்ற பயனர்களுக்கு காட்டப்படாது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w

மேலும், உங்கள் மொபைலில் பதியாத எண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் கூட உங்களது வாட்ஸ் எண் காட்டப்படாது. இதன் மூலம் மொபைல் எண்கள் மூலம் நடக்கும் மோசடியை இது தடுக்கும்.

இருப்பினும், உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்ட விரும்பினால், அதற்கு ஏற்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதாவது, பயனர்களுக்கு 'Username' அல்லது 'Phone Number' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், திரையில் ஏதாவது ஒன்று தான் தோன்றும். Setting ஆப்ஷனுக்குள் சென்று profile- ஐ கிளிக் செய்து, அதற்கு வலதுபக்கத்தில் 'Create Username' என்ற ஆப்ஷன் இருக்கும்.

அங்கு, தங்களுக்கு விருப்பப்பட்ட Username-ஐ பயனர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚪️🔴JUST IN: போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.

- @u7news
⚪️🔴இன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

- @u7news
⚪️🔴10 அணிகள் உலகோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி:

உலககோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.

ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடை யிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7' அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.

இதன்படி ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன.

மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது.

- @u7news
⚪️🔴வியாழக்கிழமை
10. 4. 2025
Important news today



📍நீட் அனைத்து கட்சி கூட்டம்

நீட் விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது


📍தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக 1480 ரூபாய் உயர்ந்து 67 280 க்கு விற்பனையானது


📍குடியரசுத்தலைவர்

ஸ்லோவா கியாவில் குடியரசு தலைவர் திரெளபதி முன்மு அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லே க்ரினியை சந்தித்தார் இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினார்


📍தங்கம் வென்றார் விஜய்வீர்

அர்ஜென்டினாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் விஜய் வீர் தங்கம் பதக்கம் வென்றார்


📍குஜராத் வெற்றி

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது,
ஏப்ரல்  13,
வரலாற்றில் இன்று.

📌தமிழ்நாட்டில் உப்புச்சத்தியாகிரகம் தொடங்கிய தினம் இன்று.

📌காந்தியடிகள் தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைப் பின்பற்றி, தமிழ்நாட்டிலும் உப்புச் சத்தியாகிரகம் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் 1930ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.

📌ராஜாஜி தலைமையில் தொண்டர்களுடன் திருச்சியில் தொடங்கிய யாத்திரை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாகச் சென்று இறுதியில், ஏப்ரல் 30ஆம் நாள் வேதாரண்யத்தில் முடிவடைந்தது.

📌பின்னர், திட்டமிட்டபடி, வேதாரண்யத்தில் உள்ள அகஸ்தியன்பள்ளி உப்பளத்தில் ராஜாஜி உப்பு அள்ளினார். இதனையடுத்து ராஜாஜி கைது செய்யப்பட்டார்.

📌நாடு முழுவதிலும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியப் பல்வேறு தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
📍ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919) பற்றி சுருக்கமாக முக்கிய குறிப்புகள்:

📌நாள் மற்றும் இடம்: ஏப்ரல் 13, 1919, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் நடந்தது.

📌பின்னணி: ரௌலட் சட்டத்திற்கு எதிராக அமைதியான கூட்டம் நடத்திய மக்கள் மீது பிரிட்டிஷ் படைகள் தாக்குதல் நடத்தின.

📌படுகொலை: பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் உத்தரவின்படி, முன்னறிவிப்பு இல்லாமல் 10 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

📌பாதிப்பு: அதிகாரப்பூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டனர், ஆனால் உண்மையான எண்ணிக்கை 1000-த்திற்கும் மேல் எனக் கூறப்படுகிறது. 1200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

📌தாக்கம்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது; காந்தியின் அகிம்சை இயக்கம் வலுப்பெற்றது.

📌விசாரணை: ஹன்டர் கமிஷன் அமைக்கப்பட்டு, டயரின் செயல் கண்டிக்கப்பட்டது, ஆனால் அவருக்கு கடுமையான தண்டனை இல்லை.

எனினும் அவர் லண்டனில் இந்தியரான உத்தம் சிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இந்தியர்களிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கோபத்தைத் தூண்டியது.
2025/04/15 10:56:01
Back to Top
HTML Embed Code: