Telegram Web
மருத்துவ குறிப்பு.
மருத்துவ குறிப்பு.
மருத்துவ குறிப்பு.
மருத்துவ குறிப்பு.
மருத்துவ குறிப்பு.
அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள்

உணவு பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இதற்கு காரணம் வகை வகையான உணவுகள் வர தொடங்கியதும், அதிலுள்ள பிரமாதமான ருசியும் தான். உணவை எந்த அளவிற்கு உண்ணுகிறோம் என்பது முக்கியமில்லை. உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்பதுதான் மிக அவசியமானது. உணவின் தன்மையை பொறுத்தே அது நம் ஆரோக்கியத்தை உருகுலைக்குமா..? இல்லையா..? என்பதை தீர்மானிக்க முடியும்.

Ayurvedic Remedies To Reduce Abdominal Fat
இன்று நாம் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதன் விளைவு உடல் பருமன் கூடி பெரிய தொப்பையை தந்துவிடுவதே. பிறகு இதனை குறைக்க பாடாய் படுகின்றோம். அடி வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க எளிமையான சித்தர்களின் ஆயுர்வேத முறைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து நலம் பெறுவோம்.


உணவும் தொப்பையும்...

உண்ணும் உணவில் அதிக அளவில் கொழுப்புகள் இருந்தால் அது நம் உடலில் சேர்ந்து கொள்ளும். சிறிது சிறிதாக சேர தொடங்கி பின்னாளில், வயிறு உப்பி 'தொப்பை' என்ற ஒன்றை பெற்று தரும். இது ஆண்கள் பெண்கள் என தனி தனி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருவருக்கும் பொதுவான பாதிப்பையே தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


சித்தர்களின் முறை...

பண்டைய காலத்தில் மக்கள் நோய் நொடியின்றி இருந்ததற்கு சில முக்கிய காரணிகள் இருக்கிறது. சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, சித்த வைத்திய முறைகள், ஆசனங்கள் போன்றவை அவர்களுக்கு பெரிதும் உதவியது. இது சித்தர்களால் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வந்ததாம்.


எலுமிச்சை

ஆரோக்கியமான உடல் நிலையை தருவதில் எலுமிச்சைக்கு பெரிய பங்கு உள்ளது. தினமும் காலையில் உங்கள் நன்னாளை இந்த எலுமிச்சை சாறுடன் தொடங்குங்கள். மிதமான சுடு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைந்து விடும்.


வெந்தயம்

உடல் கச்சிதமாக வைத்து கொள்ள இந்த வெந்தயம் சிறந்த முறையில் உதவுகிறது. Galactomannan என்ற முக்கிய கொழுப்பை கரைக்க கூடிய மூல பொருள் இதில் உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் உடனடியாக கரைந்து நல்ல பலனை தரும்.


இஞ்சி

நம் வீட்டிலே உள்ள பொருட்களில் முதன்மையான மூலிகையாக இந்த இஞ்சி கருதப்படுகிறது. இதில் உள்ள Gingerols என்ற மூல பொருள் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி விடும். எனவே, தினமும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது டீ போன்று குடித்து வாருங்கள்.


திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்று முக்கிய மூலிகையின் கலவைதான் இந்த திரிபலா. இது பல்வேறு மருத்துவ குறிப்புகளில் பயன்படுகிறது. தினமும், இரவு உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் இந்த திரிபலா பொடியை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடியில் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகள் காணாமல் போய்விடும்.


பூண்டு

வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க பூண்டு பெரிதும் பயன்படுகிறது. தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவிலே குறையும். மேலும், ரத்த ஓட்டம் சீரடைந்து உடல் ஆரோக்கியம் நலம் பெறும்.


புனர்நவா

இது முதன்மையான மூலிகையாக ஆயுர்வேத மருத்துவத்தில் கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த மூலிகையை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். அத்துடன் மலசிக்கல், அஜீரான கோளாறுகள் இவற்றால் அவதிப்படுவோர் விரைவிலே குணமடையலாம்.


இலவங்கப்பட்டை

உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகளில் நம்ம வீட்டு மருந்தான இலவங்கப்பட்டையும் உதவும். சீரான முறையில் உடலில் செயல்பாட்டை இது வழி நடத்துகிறது. அத்துடன் கொழுப்பை எளிதில் இது கரைத்தும் விடுகிறது. இலவங்கப்பட்டை டீ காலையில் குடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம்.


முருங்கை

முருங்கை பல நோய்களுக்கு அருமையான மருந்தாக உள்ளது. இதனை டீ போன்று குடித்து வந்தால் உடல் எடை கச்சிதமாக மாறும். மேலும், சீரான உடல் நலத்தையும், ரத்த ஓட்டத்தையும் முருங்கை டீ தரும். அடி வயிற்று கொழுப்புக்களை இந்த டீ ஒரு சில வாரத்திலே குறைத்து விடுமாம்.
கீரைகளைச் சமைக்கும் போது தட்டு போட்டு மூடி சமைக்கலாமா? இதனால் சத்துக்கள் வீணாகுமா? முழுமையான சத்துக்கள் கிடைக்க வழி கூறுங்கள்.

கீரைகள் வளரும் போது பல்வேறு ரசாயனப் பொருட்களை கிரகித்துக் கொள்கிறது. கீரையை வேக வைக்கும் போது அந்த சூட்டில் நீராவியோடு தேவையற்றவை வெளியேறி விடும். எனவே கீரையைச் சமைக்கும் போது பாத்திரத்தைத் திறந்து வைத்து சமைப்பதுதான் நல்லது.

கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப் பொருள்கள் வீணாகி விடும். கீரைகளை வெயிலில் நீண்ட நேரம் வைத்தாலோ பொறித்தாலோ அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும்.
தினமும் காலையில்
வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால்..?


ஒரு அற்புதமான மூலிகை தான் அருகம்புல்.

அருகம்புல் சாறு

எப்படி எடுத்து கொள்ளலாம்?

அருகம்புல்லை தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின்*

தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்*

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன்*

துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.

மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.


நன்மைகள்


உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு

அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது.



ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன்,

ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.



ஞாபக சத்தியைத் தூண்ட*

அருகம்புல் சிறந்த மருந்தாகும்.

ஞாபக மறதியைப் போக்கி

அன்றாட வாழ்வில்
மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.



அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து

தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால்

நினைவாற்றல் அதிகரிக்கும்.



அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும்

சம அளவு எடுத்துக் கொண்டு

அதை உடலில் தேய்த்து

அரைமணி நேரம் ஊறவிடவும்.

பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால்

உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

 

வாயுத்தொல்லை உள்ளவர்கள்

அருகம்புல் சாறு அருந்தி வர,

அதிலிருந்து விடுபடலாம்.

உடல் சூட்டையும் இது தணிக்கிறது.



அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது.

இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.



குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.



நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும்.

இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது
இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
மைசூர் போண்டா செய்வது எப்படி .....?

மைசூர் பேமஸ் புல்லட் போண்டா அதுவும் ஐந்தே நிமிடத்தில் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு குழி கரண்டி கொண்டு இரண்டு முறை நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த தயிருடன் அரை கப் வறுத்த ரவை சேர்த்து கலக்க வேண்டும்.

அடுத்ததாக இந்த கலவையில் மூன்று தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை அடுத்து அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய அரை கப் வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, கைப்பிடி அளவு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய அல்லது துருவிய சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவு கலவை தயார் செய்யும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் மாவு பக்குவத்தில் இருக்காது.

இந்த மாவு போண்டா பதத்திற்கு வரும்வரை நன்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் தண்ணீர் அதிகமாக மாறினால் ஒரு தேக்கரண்டி கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் கலந்து வைத்திருக்கும் மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். மிதமான தீயில் நாம் தயார் செய்யும் பொழுது மட்டுமே மாவின் உள்பக்கமும் நன்கு வெந்திருக்கும்.

இல்லை என்றால் வடையின் வெளிப்பகுதியில் மாவு வெந்தும் உள்பக்கம் சற்று வேகாமலும் இருக்க வாய்ப்புள்ளது. இப்பொழுது சுவையான மைசூர் புல்லட் போண்டா தயார். இந்த போண்டாவிற்கு பூண்டு அதிகமாக சேர்த்த தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அமிர்தமாக இருக்கும்..
கச்சோரி செய்வது எப்படி ...?

கச்சோரி செய்வதற்கு முதலில் மாவு தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் மைதா மாவு, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முதலில் மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்...

அதை அடுத்து சிறிது சிறிதாக வெந்நீர் கலந்து மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவை சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். இறுக்கமாக பிசைந்த மாவை 10 முதல் 15 நிமிடம் அப்படியே மூடி போட்டு தனியாக வைத்து விடலாம்.

இந்த நேரத்தில் கச்சோரி உள்ளே வைப்பதற்கான பூரணம் தயார் செய்து கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சி, அரை தேக்கரண்டி காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு கப் வேக வைத்து மசித்த பச்சை பட்டாணி, மசித்த இரண்டு உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி கறி மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது மாவை சிறிய வட்ட வடிவில் திரட்டி கொண்டு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை உள்ளே வைத்து கச்சோரி வடிவத்திற்கு உருட்ட வேண்டும்.

இப்பொழுது மற்றொரு கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கச்சோரிகளை சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். மிதமான தீயில் அடுப்பை வைத்து கச்சொறியை பொரித்து எடுத்தால் நல்ல நிறத்தில் பொன்னிறமாக வரும்..
2024/09/27 17:38:44
Back to Top
HTML Embed Code: