tgoop.com/Varalatril_Intru/22011
Last Update:
140 ஆண்டுகளுக்கு முன்பு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோயம்புத்தூர் ஜனோபகார நிதி லிமிடெட் என்கின்ற இந்த வங்கி சேவை நிதி நிறுவனத்தை 1883-ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி சி.சதாசிவம் முதலியார் தொடங்கி வைத்தார்.
இதுதான் கோவை நகரின் முதல் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமாகும். இந்த வங்கியானது 15, வைசியாள் தெருவில் செயல்பட்டது.
இந்த வங்கியின் நீண்ட வரலாற்றில், வங்கியின் இயக்குநர்கள் குழுவில் பல சிறந்த ஆளுமைகள் இருந்தனர்.
01. எம்.சம்பந்த முதலியார் (ஆர்.எஸ்.
புரத்தில் உள்ள சம்பந்தம் சாலை.
அவர் பெயரில் உள்ளது)
02. பி.ரங்கே கவுடர் (ரங்கே கவுடர் வீதி
இவர் பெயரிலேயே அமைந்துள்ளது)
03. சுவாமிகண்ணு வின்சென்ட்
(கோட்டைமேடு மாலைமுரசு
சாலையானது வின்சென்ட் ரோடு
என்று இவர் பெயரிலேயே
அழைக்கப்படுகிறது)
04. விஜயரங்க முதலியார்,
05. என்.கிரிய செட்டியார்,
06. பில்லர் செட்டியார்,
07. எம்.எஸ். பழனியப்ப முதலியார்
08. லால்ஜி சைட்,
09. சி.எஸ்.மீனாட்சிசுந்தரம் முதலியார்,
10. டி.நாராயணசுவாமி கவுண்டர்
11. எல்.முனியண்ணா கவுண்டர்
போன்றவர்கள் இந்த நிறுவனத்தை கடினமான காலங்களில் சிறப்பாக வழி நடத்தினர்.
#குறிப்பு: இந்த வங்கியை துவங்கிய சதாசிவம் முதலியார் வேறு யாருமல்ல. 1906 முதல் 1926 வரை கோயம்புத்தூர் மாநகர சபையின் உறுப்பினராகவும், 1921 முதல் 1936 வரை அதன் தலைவராகவும், 1926 முதல் 1936 வரை சென்னை சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய இரத்தின சபாபதி முதலியாரின் தந்தையார் ஆவார். இவரின் பெயரில்தான் இரத்தின சபாபதி புரம் என்கின்ற இன்றைய ஆர்.எஸ்.புரம் அமைந்துள்ளது.
BY வரலாற்றில் 🏹 இன்று
Share with your friend now:
tgoop.com/Varalatril_Intru/22011