tgoop.com/Varalatril_Intru/23337
Last Update:
1958 ஆம் ஆண்டில் அவரது மணிவிழாவின் பொழுது காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தினர் தமிழ்க்கடல் என்னும் பட்டத்தை வழங்கினர்.
1961 ஆம் ஆண்டில் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபையினர் சிவமணி எனப் பட்டம் வழங்கினர்
1963 ஆம் கோலாலம்பூர் அருள் நெறித் திருக்கூட்டத்தினர் சிவம்பெருக்கும் சீலர் என்னும் பட்டம் வழங்கினர்
வண்கவி வள்ளல் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.[4].
நூலகம்
ராய. சொக்கலிங்கம் தான் சேர்த்து வைத்திருந்த நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கி விட்டார்.
மறைவு
ராய. சொக்கலிங்கம் 1974 செப்டம்பர் 24ஆம் நாள் காரைக்குடியில் காலமானார்.
வாழ்க்கை வரலாறு
ராய. சொக்கலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை "தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம்" என்னும் நூலாக சா. கிருட்டிணமூர்த்தி, ச. சிவகாமி ஆகிய இருவரும் பதிப்பித்து இருக்கின்றனர். அந்நூலை சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது.
நினைவேந்தல்
இவரது நினைவாக கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ராய. சொக்கலிங்கம் நினைவுச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
BY வரலாற்றில் 🏹 இன்று
Share with your friend now:
tgoop.com/Varalatril_Intru/23337